வழிபாடு
ஸ்ரீரங்கம்: ஒற்றை பிரபை, ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை உற்சவர் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
தைத்தேர் உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை உற்சவர் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். 16-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் நிலையை அடையும்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தைத்தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
தைத்தேர் உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை உற்சவர் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். 16-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் நிலையை அடையும்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தைத்தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.