வழிபாடு
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சாமி வீதிஉலா

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சாமி வீதிஉலா

Published On 2021-12-22 03:56 GMT   |   Update On 2021-12-22 03:56 GMT
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நடராஜர் மற்றும் அம்மன் முக்கிய வீதிவழியாக திருவீதிஉலா காட்சியும், தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது.
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நேற்று திருவாதிரையை முன்னிட்டு முல்லைவனநாதர், கர்ப்பரட்சாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி நடராஜர் மற்றும் அம்மன் முக்கிய வீதிவழியாக திருவீதிஉலா காட்சியும், தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரா.ஹரிகரன், செயல் அலுவலர் கோ.முரளிதரன் ஆகியோரின் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News