ஆன்மிகம்
திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சாமி கோவில் உள்ளது. பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து கடங்கள் ஊர்வலமாக மகாலிங்க சாமி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வார சிறப்பு வழிபாட்டில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தம்பிரான் சாமிகள், கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து கடங்கள் ஊர்வலமாக மகாலிங்க சாமி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வார சிறப்பு வழிபாட்டில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தம்பிரான் சாமிகள், கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.