ஆன்மிகம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா

Published On 2021-11-19 08:33 GMT   |   Update On 2021-11-19 08:33 GMT
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கார்த்திகை மாத பவுா்ணமி நாளான நேற்று மகா சமுத்திர ஆரத்தி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கார்த்திகை மாத பவுா்ணமி நாளான நேற்று மகா சமுத்திர ஆரத்தி நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள பரசு ராம விநாயகா் கோவில் முன்பு பக்தா்கள் சங்கமித்தல், மாலை 5.15 மணிக்கு பஞ்ச சங்குநாதம், 6 மணிக்கு 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றுதல், இரவு 7 மணிக்கு சமுத்திர அபிஷேகம், 7.30 மணிக்கு தூபம் ஆரத்தி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர். காந்தி, வெள்ளிமலை சைதானந்த மகராஜ் சுவாமிகள், நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஜெகன்நாதன், தேவ், சுபாஷ், பக்தர்கள் சங்க பொருளாளர் முருகன், தம்பி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை தலைவா் ராஜகோபால், பொதுச்செயலாளா் சிவசுப்பிரமணியபிள்ளை, பொருளாளா் காமராஜ், ஒருங்கிணைப்பாளா் கனகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News