ஆன்மிகம்
காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2021-10-18 07:49 GMT   |   Update On 2021-10-18 07:49 GMT
காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். இக்கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

நேற்று புரட்டாசி மாதம் கடைசி நாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை 4 மணி முதலே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம், கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News