ஆன்மிகம்
உறையூர் வெக்காளியம்மன் கோவில்

வருகிற 20-ந்தேதி முதல் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை

Published On 2021-09-18 06:49 GMT   |   Update On 2021-09-18 06:49 GMT
உறையூர் வெக்காளியம்மன் கோவிலின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் அம்பாளை வைத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜகோபுரம் மற்றும் இதர விமானங்களின் திருப்பணி செய்ய ஏதுவாக நேற்று முன்தினம் பாலாலயம் நடைபெற்றது.

அர்த்தமண்டபத்தில் கருங்கல் திருப்பணிகள் நடைபெறுவதால் வருகிற 20-ந்தேதி முதல் மூலவர் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே கோவிலின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் அம்பாளை வைத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News