ஆன்மிகம்
37 அடி ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கத்தில் நிறுவப்படுகிறது

தமிழகத்திலேயே மிக உயரமானது: 37 அடி ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கத்தில் நிறுவப்படுகிறது

Published On 2021-09-14 12:42 IST   |   Update On 2021-09-14 12:42:00 IST
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை ராட்சத லாரி மூலம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள கொள்ளிடக்கரைக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் ஆஞ்சநேயர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அதைவிட உயரமாக 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வாசுதேவன் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் முதலில் 33 அடி உயர ஆஞ்சநேயர் சிலைதான் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்காக நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் கல் தேடியபோது, 105 டன் எடையுள்ள 40 அடி உயரத்தில் ஒரே கல் கிடைத்தவுடன் 37 அடி உயர சிலை அமைப்பது என முடிவெடுத்தோம். பின்னர் அந்த கல்லில் ஆஞ்சநேயர் சிலை கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை ராட்சத லாரி மூலம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள கொள்ளிடக்கரைக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்திக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயர் சிலையுடன், இங்கு சிறிய அளவில் கோவிலும் அமைக்கப்பட்டு அதில் நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை ஸ்ரீரங்கம் மேலூர் வந்தடைந்த ஆஞ்சநேயர் சிலையை பக்தர்கள் மலர் தூவி வணங்கினர்.

Similar News