ஆன்மிகம்
அமாவாசை: சதுரகிரியில் நாளை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
பக்தர்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்துக்கும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இங்கு அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சதுரகிரி வந்து தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அவ்வப்போது ஆலய தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்து வருகிறது.
அதன்படி சனிக்கிழமை முதல் 6-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி வந்து தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.
இந்த காலங்களில் வழக்கமான பூஜை பூசாரிகள் மூலம் நடைபெறும். பக்தர்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்துக்கும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரை பகுதிகளிலும் அமாவாசை நாளில் (6-ந்தேதி) பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சதுரகிரி வந்து தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அவ்வப்போது ஆலய தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்து வருகிறது.
அதன்படி சனிக்கிழமை முதல் 6-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி வந்து தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.
இந்த காலங்களில் வழக்கமான பூஜை பூசாரிகள் மூலம் நடைபெறும். பக்தர்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்துக்கும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரை பகுதிகளிலும் அமாவாசை நாளில் (6-ந்தேதி) பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.