ஆன்மிகம்
திருச்சி நாகநாதசாமி கோவிலில் சேதமடைந்துள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர்

திருச்சி நாகநாதசாமி கோவிலில் சேதமடைந்துள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை

Published On 2021-07-13 04:55 GMT   |   Update On 2021-07-13 04:55 GMT
திருச்சி நாகநாதசாமி கோவில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்த நிலையில், இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் அந்த பகுதி பொதுமக்கள் அந்த சேதமடைந்த சுற்றுச்சுவரை சரி செய்து கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மலைக்கோட்டை மேற்கு புறத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலின் தென்புறத்தில் கோவில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தலத்தில் கிழக்கு புறம் தோட்டத்துடன் கூடிய இடமும், தெற்கு பகுதியில் நடைபாதையும், மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் வீடுகளும் உள்ளது.

இதில் தெப்பக்குளத்தின் கிழக்கு பகுதியில் மட்டும் சேதமடைந்த சுவற்றை சரி செய்து புதிதாக சுவர் கட்டப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்த நிலையில், இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் அந்த பகுதி பொதுமக்கள் அந்த சேதமடைந்த சுற்றுச்சுவரை சரி செய்து கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் நிர்வாகத்தினர் இந்த சுற்றுச்சுவரை சரி செய்து கொடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News