ஆன்மிகம்
பண்ணாரி அம்மன் கோவிலில் மறுபூஜை
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இரவில் இருந்து தாரை தப்பட்டைகள், வாத்தியங்கள் முழங்க படைக்கலம் எடுத்துச் சென்று மாதேஸ்வரன் மற்றும் சருகுமாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் எளிய முறையில் தொடங்கியது.
தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி அதிகாலை அம்மன் அழைப்பும், பின்னர் தலைமை பூசாரி உள்பட 11 பேர் குண்டத்தில் இறங்கும் நிகழ்வும் நடந்தது. தீ மிதிக்கும் நிகழ்வு முடிவடைந்ததும் குண்டம் தகரங்கள் வைத்து மறைக்கப்பட்டது.
கடந்த 2-ந் தேதி கோவில் சார்பில் தங்க ரதம் கோவிலை சுற்றி வலம் வந்தது. நேற்று காலை மறு பூஜை நடந்தது. இரவு கோவிலில் இருந்து தாரை தப்பட்டைகள், வாத்தியங்கள் முழங்க படைக்கலம் எடுத்துச் சென்று மாதேஸ்வரன் மற்றும் சருகுமாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மறுபூஜையையொட்டி சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி அதிகாலை அம்மன் அழைப்பும், பின்னர் தலைமை பூசாரி உள்பட 11 பேர் குண்டத்தில் இறங்கும் நிகழ்வும் நடந்தது. தீ மிதிக்கும் நிகழ்வு முடிவடைந்ததும் குண்டம் தகரங்கள் வைத்து மறைக்கப்பட்டது.
கடந்த 2-ந் தேதி கோவில் சார்பில் தங்க ரதம் கோவிலை சுற்றி வலம் வந்தது. நேற்று காலை மறு பூஜை நடந்தது. இரவு கோவிலில் இருந்து தாரை தப்பட்டைகள், வாத்தியங்கள் முழங்க படைக்கலம் எடுத்துச் சென்று மாதேஸ்வரன் மற்றும் சருகுமாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மறுபூஜையையொட்டி சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.