ஆன்மிகம்
ராமாயணத்தில் ராமனின் பரிவாரப் படைகளில் மருத்துவராக இருந்தவர் சுசேனா. ராமனுக்கும், ராவணனுக்குமான யுத்தத்தின் போது லட்சுமணனை சுசேனா காப்பாற்றிய கதையை அறிந்து கொள்ளலாம்.
ராமாயணத்தில் ராமனின் பரிவாரப் படைகளில் மருத்துவராக இருந்தவர் சுசேனா. ராமனுக்கும், ராவணனுக்குமான யுத்தம் உக்கிரமாக நடைபெற்று வந்தது. அப்போது ராவணனின் மகன் இந்திரஜித் விட்ட அம்பு தாக்கி லட்சுமணன் மயங்கி விழுந்தார்.
இதனால் ராமன் மிகவும் கலங்கிப் போனார். அவரது கலக்கத்தைக் கண்ட சுசேனா, “ராமா! லட்சுமணன் மயக்க நிலையில்தான் இருக்கிறார். இமயமலைப்பகுதியில் உள்ள சஞ்சீவி மலையில் இருந்து சில அரிய வகை மூலிகைகளைக் கொண்டு வந்தால், லட்சுமணனை நிச்சயம் மீட்டுவிடலாம்” என்றார்.
இந்தப் பணியைச் செய்ய அனுமன் நியமிக்கப்பட்டார். அவர் விரைவாக பறந்து சென்று சஞ்சீவி மலையில் இருந்து மூலிகையை தேடினார். அவரால் குறிப்பிட்ட மூலிகையை கண்டறிய முடியாததால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இதையடுத்து சுசேனா, மூலிகையைக் கொண்டு லட்சுமணனை உயிர்ப்பித்தார்.
இதனால் ராமன் மிகவும் கலங்கிப் போனார். அவரது கலக்கத்தைக் கண்ட சுசேனா, “ராமா! லட்சுமணன் மயக்க நிலையில்தான் இருக்கிறார். இமயமலைப்பகுதியில் உள்ள சஞ்சீவி மலையில் இருந்து சில அரிய வகை மூலிகைகளைக் கொண்டு வந்தால், லட்சுமணனை நிச்சயம் மீட்டுவிடலாம்” என்றார்.
இந்தப் பணியைச் செய்ய அனுமன் நியமிக்கப்பட்டார். அவர் விரைவாக பறந்து சென்று சஞ்சீவி மலையில் இருந்து மூலிகையை தேடினார். அவரால் குறிப்பிட்ட மூலிகையை கண்டறிய முடியாததால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இதையடுத்து சுசேனா, மூலிகையைக் கொண்டு லட்சுமணனை உயிர்ப்பித்தார்.