ஆன்மிகம்

குங்கும மேனியாய் காட்சி அளிக்கும் அம்மன்

Published On 2019-04-16 09:26 GMT   |   Update On 2019-04-16 09:26 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் தைப்பூசம், பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம், தெப்ப உற்சவம், பஞ்சபிரகார விழா ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும். இங்குள்ள அம்மனின் தலைக்குமேல் 5 தலை நாகம் போன்ற அமைப்பிருக்கும். குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.

8 கைகளுடன் அம்மன் வீற்றிருப்பார். விஜயநகர அரசன் போருக்கு புறப்பட்டு செல்லும்போது சமயபுரம் மாரியம்மனிடம் போரில் தான் வெற்றி பெற்றால் தனியாக ஒரு கோவிலை கட்டுவதாக வேண்டிக்கொண்டான். போரில் வெற்றி பெற்றவுடன் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. மாரியம்மன் வீற்றிக்கும் இப்பகுதியை சமயபுரம், கண்ணனூர், கண்ணபுரம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆதிமாரியம்மனாக விளங்கும் அம்மன் இனாம்சமயபுரத்தில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம் ஆகும். ஒரு காலத்தில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் வேப்பமரத்தையும் சுற்றி வந்து வணங்கி செல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் அம்மை நோய் கண்டால் அம்மனின் தீர்த்தத்தை உடலில் தெளித்தால் அது மறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Tags:    

Similar News