ஆன்மிகம்

பாடலீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா 4-ந்தேதி நடக்கிறது

Published On 2019-02-28 10:24 IST   |   Update On 2019-02-28 10:24:00 IST
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
சிவனுக்கு உகந்த சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று சிவஸ்தலங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

சிவராத்திரி அன்று இரவு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு 4 காலமும் விசேஷ அபிஷேக பூஜைகளும், மறுநாள்(செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அதிஉன்னத அதிகார நந்தி கோபுரதரிசனமும் நடைபெறுகிறது. இதுதவிர மாலை 5 மணி முதல் வாய்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், நள்ளிரவு 12.45 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கலியபெருமாளின் மகா சிவராத்திரி பெருமை என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News