ஆன்மிகம்
லீலைகள் நிறைந்த விஷ்ணுவின் அவதாரம்
மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் அவதாரம். விஷ்ணுவின் அவதாரங்களிலேயே லீலைகள் பல நிறைந்தது இந்த அவதாரம் தான்.
மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் அவதாரம். விஷ்ணுவின் அவதாரங்களிலேயே லீலைகள் பல நிறைந்தது இந்த அவதாரம் தான்.
வசுதேவருக்கும்- தேவகிக்கும் சிறைச் சாலைக்குள் பிறந்த கிருஷ்ணர், அன்றே இரவோடு இரவாக கோகுலத்தில் உள்ள யசோதையிடம் சேர்க்கப்பட்டார். அங்கு பல லீலைகள் செய்தபடி வளர்ந்த கிருஷ்ணரை, தேவகியின் சகோதரன் கம்சன் கொல்ல துடித்தான்.
ஒரு கட்டத்தில் சிறுவனான கிருஷ்ணன், கம்சனை வதம் செய்தார். கிருஷ்ணர், மகாபாரதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். தன் உறவினர்களுக்கு எதிராக போர் புரிய தயங்கி, அர்ச்சுனன் செய்வதறியாது நின்றான்.
அப்போது அவனுக்கு தர்ம அதர்மங்களை விளக்கி, அவன் போர் புரிய வேண்டியதன் அவசியத்தை விளக்கியவர், கிருஷ்ணன். பாண்டவர்கள் அந்த குருசேத்திரப் போரில் வெற்றிபெறவும், கிருஷ்ணன் செய்த சூட்சுமங்களே காரணமாக அமைந்தன.
குருசேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் வழங்கிய அறிவுரைகளே பகவத் கீதையாக புகழ்பெற்று விளங்குகிறது.
வசுதேவருக்கும்- தேவகிக்கும் சிறைச் சாலைக்குள் பிறந்த கிருஷ்ணர், அன்றே இரவோடு இரவாக கோகுலத்தில் உள்ள யசோதையிடம் சேர்க்கப்பட்டார். அங்கு பல லீலைகள் செய்தபடி வளர்ந்த கிருஷ்ணரை, தேவகியின் சகோதரன் கம்சன் கொல்ல துடித்தான்.
ஒரு கட்டத்தில் சிறுவனான கிருஷ்ணன், கம்சனை வதம் செய்தார். கிருஷ்ணர், மகாபாரதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். தன் உறவினர்களுக்கு எதிராக போர் புரிய தயங்கி, அர்ச்சுனன் செய்வதறியாது நின்றான்.
அப்போது அவனுக்கு தர்ம அதர்மங்களை விளக்கி, அவன் போர் புரிய வேண்டியதன் அவசியத்தை விளக்கியவர், கிருஷ்ணன். பாண்டவர்கள் அந்த குருசேத்திரப் போரில் வெற்றிபெறவும், கிருஷ்ணன் செய்த சூட்சுமங்களே காரணமாக அமைந்தன.
குருசேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் வழங்கிய அறிவுரைகளே பகவத் கீதையாக புகழ்பெற்று விளங்குகிறது.