ஆன்மிகம்
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் யாகசாலைக்கு சிறப்பு பூஜை நடந்த போது எடுத்த படம்.

தாமிரபரணி புஷ்கர விழா: எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் கொடியேற்றம்

Published On 2018-10-10 05:37 GMT   |   Update On 2018-10-10 05:37 GMT
நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு எதிரே அமைக்கப்பட்டு உள்ள யாகசாலையில் நேற்று காலை 6 மணிக்கு தசமகா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து 7 மணிக்கு தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம் நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் வரதராஜ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகாகாளி யாகம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயுத்துறையில் புதிதாக கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ள படித்துறையில் சிறப்பு யாக பூஜை நடக்கிறது. 9 மணிக்கு புதிய படித்துறையில் ஓம்கார நந்தா சுவாமிகள், புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை பூஜையை நடத்துகிறார்.

அன்னை ராமலட்சுமி தேவி, படித்துறையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். காலை 10 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோசாலையில் நடக்கும் யாகசாலை பூஜையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மகாஆராத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார். தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது.
Tags:    

Similar News