ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

சோலைமலை முருகன் கோவிலுக்கு 108 மயில் காவடிகளுடன் வந்த பக்தர்கள்

Published On 2018-08-10 11:26 IST   |   Update On 2018-08-10 11:26:00 IST
சோலைமலை முருகன் கோவிலுக்கு 108 மயில் காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையின் சார்பாக 108 முருகபக்தர்கள் மயில்காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டு கொன்னையூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிபட்டி வழியாக உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோவி லுக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்தனர். அங்கு கோவிலின் 4 பிரகாரங்களிலும் மேள தாளம் முழங்க பக்தர்கள் காவடியுடன் ஆடிப்பாடி மூலவர் சன்னதியை அடைந்து சாமிதரிசனம் செய்தனர்.

சாமிக்கு திருஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு பால், பழம், பன்னீர், தேன், புஷ்பம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின்னர் சர்வ அலங்காரத்தில் சாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் தங்கத்தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வழிபாடு சபையின் தலைவர் பொன்.முத்துவிநாயகம், பொருளாளர் டி.ஏ.சேகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த முருக பக்தர்களை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.

Tags:    

Similar News