ஆன்மிகம்

வாரிசுகள் உருவாக வாழை மரம் வளர்க்கலாமே?

Published On 2018-06-11 04:47 GMT   |   Update On 2018-06-11 04:47 GMT
அற்புதப் பலன் தரும் வாழை மரத்தை வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வளர்த்தால் வம்ச விருத்தி ஏற்படும். வடக்கில் வாழை குலை தள்ளினால் மிகுந்த யோகம்.
மரம் வளர்ப்போம்!, மழை பெறுவோம்! என்ற வாக்கியத்தை அரசு நாடெங்கிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. திருமண வாழ்த்துகளில் வாழையடி வாழையாக வாழ்க! என்று தம்பதியரை வாழ்த்துவது வழக்கம்! அந்த அடிப்படையில் தன் உடல் முழுவதையுமே உடல் நலம் பேணத் தரும் வாழையின் வாழ்க்கை ஒரு தியாக வாழ்க்கை.

அந்த வாழ்க்கையை நாமும் பின்பற்ற வேண்டும். பிறருக்காகப் பாடுபட வேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காகத் தான் மங்கல நிகழ்வுகளில் தோரணமாக வாழை மரத்தைக் கட்டுகிறார்கள்.

அந்த அற்புதப் பலன் தரும் வாழை மரத்தை வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வளர்த்தால் வம்ச விருத்தி ஏற்படும். வடக்கில் வாழை குலை தள்ளினால் மிகுந்த யோகம். உடனே அதற்கு பொங்கல் வைத்து வழிபடுவது செட்டிநாட்டு வழக்கமாக உள்ளது. 
Tags:    

Similar News