ஆன்மிகம்

திருமால் திருவருள் கிட்ட ஸ்லோகம்

Published On 2018-12-29 08:08 GMT   |   Update On 2018-12-29 08:08 GMT
இத்துதியை சனிக்கிழமைகளில் அல்லது தினமும் பாராயணம் செய்து வந்தால் தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்டும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

(பெரியாழ்வார் திருமொழி)

பொதுப்பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.
Tags:    

Similar News