ஆன்மிகம்

குரு தோஷம் போக்கும் காயத்ரி மந்திரம்

Published On 2017-09-14 09:27 GMT   |   Update On 2017-09-14 09:27 GMT
ஜாதகத்தில் குரு பலன் குறைந்தவர்கள் வியாழக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரம் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப்பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.

‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ரூணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்’

அல்லது

‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’

என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.
Tags:    

Similar News