ஆன்மிகம்

திருமண தடை நீங்க அங்காரக பகவான் காயத்ரி

Published On 2017-08-06 05:22 GMT   |   Update On 2017-08-06 05:22 GMT
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய் கிழமைகளில் சொல்லி வந்தால் திருமண தடை விலகும்.
சொல்லுக்கு வலிமை நல்கி
தைரியம் ஆண்மை வீரம்
நல்லவை அனைத்தும் நல்கி
நலிவெலாம் போக்கி வைக்கும்
வல்லதோர் சக்தி கையில்
வைத்தமே அருள் வழங்கும்
அல்லல்கள் தமை அகற்றும்
அங்காரக போற்றி போற்றி!

அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்வித்துச் சிவப்பு வஸ்திரம், பவழம், சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பித் துவரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து, தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரக கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.

Tags:    

Similar News