ஆன்மிகம்

செவ்வாய் தோஷத்தை விரட்டும் ஸ்லோகம்

Published On 2017-08-02 07:38 GMT   |   Update On 2017-08-02 07:38 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தத் துதியை தினமும் 108 முறை பாராயணம் செய்து வர செவ்வாய் தோஷத்திற்கு விளைவுகள் நீங்கி மங்களம் பெருகும்.
அங்காரகப் பரிகாரத் திருத்தலங்களில் முதன்மையானது வைத்தீஸ்வரன் கோவில். ஸ்ரீராமபிரான் ஜடாயுவிற்கு இறுதிச்சடங்கு கிரியைகளின் ஒரு பகுதியை இத்திருத்தலத்தில் செய்ததால் ‘புள்ளிருந்த வேளூர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது இங்கு சேவை தரும் அழகு கொஞ்சிடும் செல்வமுத்துக் குமாரனையும், தையல் நாயகி அம்பிகையையும் வணங்கி அங்காரகனுக்குத் தீபம் ஏற்றி வழிபட செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.

‘தரணீகர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்திஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்’

-ஸ்ரீ வியாச பகவான் மகாபாரதம்

இந்தத் துதியை தினமும் 108 முறை பாராயணம் செய்து வர செவ்வாய் தோஷத்திற்கு விளைவுகள் நீங்கி மங்களம் பெருகும்.

Tags:    

Similar News