ஆன்மிகம்

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம்

Published On 2016-06-22 10:31 IST   |   Update On 2016-06-22 10:31:00 IST
இந்த ஸ்லோகத்தை படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.
ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.

யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ
மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி !
ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா மன்தே ச
வேதாந்தமஹாரஹஸ்யம்!!

பொருள் :

பால சந்திரனை சிரஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறவன், ஆயுள் ஐஸ்வர்யம் வித்தை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் வேதாந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான். குரு வக்ர காலத்தில் நற்பலன்களைப் பெற, மேற்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

Similar News