ஆன்மிகம்
விநாயகர்

இந்த விநாயகரை வழிபட்டால் திருமண தோஷம் நீங்கும்

Published On 2021-09-15 06:13 GMT   |   Update On 2021-09-15 06:13 GMT
கன்னிப்பெண்கள் அவர்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபடுகின்றனர்.
தாலி பெண்களுக்கு உரித்தானது என்றாலும், மதுரையிலுள்ள ஒரு விநாயகருக்கு தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் பெண்கள், இச்சடங்கு மதுரை வடக்குமாசி வீதி, மேலமாசிவீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலாலசுந்தர விநாயகர் கோவிலில் நடக்கிறது.

இங்கு கன்னிப்பெண்கள் அவர்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளை தாலிக்கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்கி, நல்ல கணவர் அமைவார் என்பது நம்பிக்கை.

பொதுவாக அரச மரத்தின் கீழ் அமர்ந்த்திருக்கும் விநாயகர், இங்கு ஆல மரத்தின் கீழ் சுந்தரத்துடன் (அழகுடன்) இருப்பதால் ஆலால சுந்தரர் என அழைக்கப்பட்ட இவரை, மதுரைக்கு வந்த ஜவஹர்லால் நேரு வணங்கிச் சென்றதால், நேரு ஆலாலசுந்தர விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

இவரை வணங்கினால் முகப்பொலிவும், அழகும் பெறலாம் என்பது நம்பிக்கை. விநாயகர் ருத்ர அம்சமானவர் என்பதால், மார்கழி திருவாதிரையில் இவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு களி பிரசாதம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News