ஆன்மிகம்

நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்

Published On 2018-07-23 07:49 GMT   |   Update On 2018-07-23 07:49 GMT
முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு உங்கள் கைப்பட நீங்களே முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே நாகதோஷம் அகன்று விடும்.
சிலரது ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களின் அமைப்பு சரி இல்லாமல் இருக்கும். இதன் காரணமாக எத்தனை வரன் பார்த்தாலும் திருமண யோகம் என்பதே வராது. கடுமையான நாகதோஷம் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படும். முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு உங்கள் கைப்பட நீங்களே முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும்.

முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு சென்றால் கருவறை பின் பகுதியில் ஒரு பெரிய அலமரம் இருப்பதைப் பார்க்கலாம். அந்த ஆல மரத்துக்குள் நாக புற்று உள்ளது. அருகில் நாகர் சன்னதி உள்ளது.

அந்த சன்னதியில் மஞ்சள், குங்குமம், பன்னீர் தெளித்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

வசதி இருப்பவர்கள் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம். இத்தகைய வழிபாடுகளால் எத்தகைய நாக தோஷமும் விலகிச் சென்றுவிடும்.c
Tags:    

Similar News