ஆன்மிகம்
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய விழாவில் நற்கருணை பவனி
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு சேசு சபை அருட்தந்தை ஹென்றி ஜெரோம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
10 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது. இதில் பாட்டாகுறிச்சி பங்குத்தந்தை ரினோய்கட்டிப்பரம்பில் வழிபாடு நடத்தினார். மாலையில் பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து பிரசங்கம் நடத்தினார். இதைத்தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. வழக்கமாக இந்த பவனி வீதிகளில் நடைபெறும்.
கொரோனா காரணமாக ஆலயத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. ஆலயத்திற்குள் பக்தர்கள் குறைவான அளவில் சமூக இடைவெளியில் அமர்ந்திருந்தனர். இன்று சப்பர பவனி நடைபெறுகிறது.
10 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது. இதில் பாட்டாகுறிச்சி பங்குத்தந்தை ரினோய்கட்டிப்பரம்பில் வழிபாடு நடத்தினார். மாலையில் பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து பிரசங்கம் நடத்தினார். இதைத்தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. வழக்கமாக இந்த பவனி வீதிகளில் நடைபெறும்.
கொரோனா காரணமாக ஆலயத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. ஆலயத்திற்குள் பக்தர்கள் குறைவான அளவில் சமூக இடைவெளியில் அமர்ந்திருந்தனர். இன்று சப்பர பவனி நடைபெறுகிறது.