ஆன்மிகம்
புனித மிக்கேல் அதிதூதர்

மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2020-09-26 07:34 GMT   |   Update On 2020-09-26 07:34 GMT
மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் தலைமை தாங்குகிறார்.

28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து தென்தாமரைகுளம் பங்குத்தந்தை ஜெரி வின்சென்ட் தலைமையில் திருப்பலியும் நடக்கிறது. 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, கோட்டார் மறைவட்ட முதன்மைக்குரு மைக்கிள் ஏஞ்சல் தலைமையில் திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News