ஆன்மிகம்
அழகப்பபுரம் புனித தெரசம்மாள் ஆலய திருவிழா

அழகப்பபுரம் புனித தெரசம்மாள் ஆலய திருவிழா

Published On 2020-09-21 03:22 GMT   |   Update On 2020-09-21 03:22 GMT
அழகப்பபுரத்தில் புனித தெரசம்மாள் சிற்றாலயம் உள்ளது. இங்கு 10 நாள் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
அழகப்பபுரத்தில் புனித தெரசம்மாள் சிற்றாலயம் உள்ளது. இங்கு 10 நாள் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 7 மணிக்கு அருட்பணியாளர் அமல்ராஜ் தலைமையில் மாலை ஆராதனையும், அருட்பணியாளர் ஆனி சேவியர் மறையுரையாற்றி, நற்கருணை ஆசீர் வழங்குகிறார். அக்டோபர் 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News