ஆன்மிகம்
வேளாங்கண்ணி மாதா

புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி ஆலய திருவிழா

Published On 2020-09-10 10:19 IST   |   Update On 2020-09-10 10:39:00 IST
காவல்கிணறு புண்ணியவாளன்புரம் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஒவ்வொரு திருநாளிலும் மாலை 5 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து பாடல் திருப்பலியும் நடந்தது.
காவல்கிணறு புண்ணியவாளன்புரம் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் மாலை 5 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து பாடல் திருப்பலியும் நடந்தது.

10-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, தூத்துக்குடி கத்தோலிக்க பிஷப் ஸ்டீபன் தலைமையில் மறையுரை, ஆடம்பர திருப்பலி நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு ஆரோக்கியராஜ், பங்கு மேய்ப்பு பணிக்குழு தலைவர் மரியமிக்கேல், செயலாளர் மனோகர், பொருளாளர் மில்டன் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Similar News