ஆன்மிகம்
பூண்டிமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்தபடம்.

பூண்டி மாதா பேராலயத்தில் கன்னிமரியாள் பிறப்பு சிறப்பு திருப்பலி

Published On 2020-09-09 05:34 GMT   |   Update On 2020-09-09 05:34 GMT
பூண்டி மாதா பேராலயத்தில் கன்னிமரியாள் பிறப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பக்தர்கள் குறைந்த அளவில் சமூக இடைவெளி விட்டு பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ் பெற்ற கிறிஸ்தவ பேராலயம் பூண்டிமாதா பேராலயம். இந்த பேராலயம் கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவிப்பின்படி மூடப்பட்டு இருந்தது. மத வழிபாட்டு தலங்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டன.

பூண்டி மாதா பேராலயத்திலும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. புனித கன்னிமரியாள் பிறப்பு நாளாக கருதப்படும் நேற்று வழக்கமாக சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நடைபெறும். தேர்பவனிக்கு 144 தடை உத்தரவை காரணம் காட்டி போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால் தேர்பவனி ரத்து செய்யப்பட்டதாக பேராலய நிர்வாகம் அறிவிப்பு செய்தது. அதேசமயம் நேற்று மாலை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் புனித கன்னிமரியாள் பிறப்பு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய துணைஅதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மிகதந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. சிறப்பு திருப்பலியில் பக்தர்கள் குறைந்த அளவில் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News