ஆன்மிகம்
பூண்டி மாதா கோவிலில் தேர்பவனி திடீர் ரத்து
பூண்டி மாதா கோவில் திருவிழாவின் தேர்பவனிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தேர்பவனி ரத்து செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என அரசு உத்தரவிட்டதையடுத்து பூண்டி மாதா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருவிழாவின் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த தேர்பவனிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தேர்பவனி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என அரசு உத்தரவிட்டதையடுத்து பூண்டி மாதா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருவிழாவின் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த தேர்பவனிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தேர்பவனி ரத்து செய்யப்பட்டது.