ஆன்மிகம்
கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு திருப்பலி: முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பிரார்த்தனை
5 மாதங்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் குமரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு கடந்த 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இதில் அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்தது.
அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, அன்று முதலே பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். ஆனால் கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டத்தை காணமுடியவில்லை.
கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திருப்பலி, பிரார்த்தனை நடந்தது.நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் ஆலயத்திற்கு வர தொடங்கினர். அவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபட்டனர். முன்னதாக ஆலய நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கும், 8 மணிக்கும் திருப்பலி நடைபெறும். தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அறிவுறுத்தினார். அதன்படி சவேரியார் ஆலயத்தில் நேற்று காலை 7 மணிக்கு கோட்டார் மறைவட்ட வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சலுஸ், பங்கு தந்தை ஸ்டேன்லி, இணை பங்குதந்தை கிஷோர், அஞ்சலோ ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது.
இதேபோல் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கற்கோவிலில் நேற்று காலையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் அரசு அறிவுறுத்திய கட்டுப்பாடுகளை கடைபிடித்து வழிபாடு நடத்தினர். அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள பிலிப்ஸ் ஆலயம், சைமன் நகர் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் ஆராதனை நடந்தது.
இதுபோல், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், வெட்டுமணி புனித அந்தோணியார் திருத்தலம், மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்தரசர் ஆலயம், மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, அன்று முதலே பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். ஆனால் கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டத்தை காணமுடியவில்லை.
கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகளில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திருப்பலி, பிரார்த்தனை நடந்தது.நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் ஆலயத்திற்கு வர தொடங்கினர். அவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபட்டனர். முன்னதாக ஆலய நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கும், 8 மணிக்கும் திருப்பலி நடைபெறும். தற்போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அறிவுறுத்தினார். அதன்படி சவேரியார் ஆலயத்தில் நேற்று காலை 7 மணிக்கு கோட்டார் மறைவட்ட வட்டார முதல்வர் மைக்கேல் ஏஞ்சலுஸ், பங்கு தந்தை ஸ்டேன்லி, இணை பங்குதந்தை கிஷோர், அஞ்சலோ ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது.
இதேபோல் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கற்கோவிலில் நேற்று காலையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் அரசு அறிவுறுத்திய கட்டுப்பாடுகளை கடைபிடித்து வழிபாடு நடத்தினர். அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள பிலிப்ஸ் ஆலயம், சைமன் நகர் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் ஆராதனை நடந்தது.
இதுபோல், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், வெட்டுமணி புனித அந்தோணியார் திருத்தலம், மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்தரசர் ஆலயம், மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.