ஆன்மிகம்
தஸ்நேவிஸ் மாதா

புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா 3 நாட்கள் நடக்கிறது

Published On 2020-08-05 08:32 GMT   |   Update On 2020-08-05 08:32 GMT
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா ஊடங்கு காரணமாக ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) மற்றும் 8, 9-ந் தேதிகளில் நடக்கிறது.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊடங்கு காரணமாக ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) மற்றும் 8, 9-ந் தேதிகளில் நடக்கிறது.

இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, மாதா நவநாள், 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடக்கிறது. 8-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, மாதா நவநாள், இரவு 7 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, 9-ந் தேதி காலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு மற்றும் மறைமாவட்ட விதிமுறைப்படி வழிபாட்டு நேரத்தில் ஆலயத்திற்குள் இறைமக்களுக்கு அனுமதி இல்லை. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் maravankudieruppu.com என்ற இணையதளத்திலும், ZOOM app மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

ZOOM app பார்க்க கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து மீட்டிங் ஐ.டி. எண்- 744 4916 3165 மற்றும் பாஸ்கோடு- MP-TMTமூலம் இணைய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 
Tags:    

Similar News