ஆன்மிகம்
நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா நிறைவு திருப்பலி
நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா நிறைவு நாள் திருப்பலி தக்கலை மறை மாவட்ட ஆயர் தலைமையில் நடந்தது.
நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்சா திருத்தலத்தில் புனித அல்போன்சா விண்ணகம் சென்ற ஜூலை 28-ம் நாளை மையமாக கொண்டு 10 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நடைமுறையில் இருக்கும் ஊரடங்கின் காரணமாக மக்கள் ஆலயம் சென்று வழிபட முடியாத சூழல் நிலவுவதால் இத்திருத்தலத் திருவிழாவை 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முதல் நாள் திருவிழா திருப்பலியை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்துப் பறம்பிலும், 2-ம் நாள் திருப்பலியை நித்திரவிளை ஜெயமாதா மறைவட்ட ஆலய பேரருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடமும் நிறைவேற்றி சிறப்பித்தனர். திருத்தல திருவிழாவின் இறுதி நாளில் திருப்பலியை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் நிறைவேற்றியதோடு, உலக மக்கள் அனைவருக்காகவும் ஜெபித்தார்.
ஊரடங்கின் காரணமாக மக்கள் யாரும் இத்திருத்தலத்திற்கு வர அனுமதி இல்லாததால் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே திருப்பலியில் பங்குபெற நேரலை, இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வசதியை பயன்படுத்தி மக்கள் இத்திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல அதிபர் சனில்ஜாண் பந்திசிறக்கல், துணை பங்குதந்தை அஜின்ஜோஸ் மற்றும் பங்கு விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முதல் நாள் திருவிழா திருப்பலியை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்துப் பறம்பிலும், 2-ம் நாள் திருப்பலியை நித்திரவிளை ஜெயமாதா மறைவட்ட ஆலய பேரருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடமும் நிறைவேற்றி சிறப்பித்தனர். திருத்தல திருவிழாவின் இறுதி நாளில் திருப்பலியை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் நிறைவேற்றியதோடு, உலக மக்கள் அனைவருக்காகவும் ஜெபித்தார்.
ஊரடங்கின் காரணமாக மக்கள் யாரும் இத்திருத்தலத்திற்கு வர அனுமதி இல்லாததால் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே திருப்பலியில் பங்குபெற நேரலை, இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வசதியை பயன்படுத்தி மக்கள் இத்திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல அதிபர் சனில்ஜாண் பந்திசிறக்கல், துணை பங்குதந்தை அஜின்ஜோஸ் மற்றும் பங்கு விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.