ஆன்மிகம்
இயேசு

ஏழைகளின் நலனில் கவனம் செலுத்துவோம்

Published On 2020-07-29 08:03 GMT   |   Update On 2020-07-29 08:03 GMT
மானுட வாழ்வு என்பது இயலாமையில் ஒன்றுமில்லாமையில் துன்புறுகிற மக்களுக்குரியதை பெற்று கொடுப்பதற்கே நமது கைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்லா வளங்களையும் நிரம்ப பெற்றிருந்த இந்திய நாட்டில் 1960-ல் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்து கப்பலில் கோதுமை வரவில்லை என்றால் மாபெரும் பஞ்சம் ஏற்படும் சூழலே எங்கும் தென்பட்டது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து நாடு பாதுகாப்பப்பட வேண்டுமெனில் விவசாயத்தை மீண்டும் கொடுத்து உழைப்பதற்கு முன்வந்தவர்களே சுவாமிநாதனும், சுப்பிரமணியனும் ஆவர். இந்தியாவின் உணவு பற்றாக்குறையை போக்க பசுமைப்புரட்சி எனும் புதிய திட்டத்திற்கு வித்திட்டனர். இன்று நமது நாட்டின் பல கோடி டன் தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவைக்கு அதிகமானவை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

தேவையை மையப்படுத்தி அதை செயலாக்க செய்வதற்காக கனவுகளை உருவாக்கி வாழ்வில் ஏற்றங்களை அடையாளம் கண்டனர். இதை போன்று நாமும் இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் சிற்சில முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இறையரசின் கருப்பொருளாம் “ ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்” என்பதனை முதன்மைப்படுத்துவோம். நாம் வாழ்கிற வீதிகளிலும், தெருக்களிலும் இயலாமையில் இருக்கிற மக்களைத் தேடி செல்வோம். அவர்களுக்குரியதை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி கொடுப்போம்.

மானுட வாழ்வு என்பது இயலாமையில் ஒன்றுமில்லாமையில் துன்புறுகிற மக்களுக்குரியதை பெற்று கொடுப்பதற்கே நமது கைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்டுவதற்கு முற்பட்ட ஒவ்வொருவருமே தனது சுயங்களை விட்டுவிட்டு பொது காரியங்களிலே அதிக கவனம் செலுத்தினர். நமது முயற்சிகள், அக்கறைகள் ஏழைகள் நலனில் கவனம் செலுத்தட்டும். ஏழைகளுக்கு கடன் கொடுக்கிறவன் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறான். ஆண்டவரும் அவர்கள் கடனை திரும்ப அடைத்து விடுவார். நமது கனவுகள், சாமானியர்களுக்கு விடுதலை அளிப்பதாய் உருமாறட்டும். என்றுமே நல்லதை முன்னெடுதது செல்ல இன்றே புறப்படுவோம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News