ஆன்மிகம்
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2020-07-28 05:34 GMT   |   Update On 2020-07-28 05:34 GMT
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா ஆலய 135-ம் ஆண்டு திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக எளிமையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை.
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற அதிசய பனிமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, திருவிழாவை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 135-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதியம் 12 மணிக்கு கொடியை திருமூலநகர் பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் ஆசிர்வதித்தார். தொடர்ந்து அதிசய பனிமாதா திருத்தல தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடி ஏற்றி வைத்தார். இதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. பின்னர் திருப்பலி, குணமளிக்கும் வழிபாட்டு திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.

விழாவில், அருட்தந்தையர்கள் ஜெபநாதன், ஆலந்தலை ரினோ, அழகப்பபுரம் ரூபன், துரைகுடியிருப்பு ஆலிபன், கிழவனேரி ப்ராகிரஸ், ஆனைகுளம் அற்புதம், பிரதீப் மற்றும் ஓ.எல்.எஸ். பள்ளி தாளாளர் வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 3-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆசீரும், 9-ம் திருவிழாவான 4-ந்தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர். கொரோனா காரணமாக, இறைமக்கள் வழிபாடுகளில் கலந்து கொள்ளாமல் வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சி வழியாக வழிபாட்டை காணும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News