ஆன்மிகம்
இதய ஆண்டவர்

இதய ஆண்டவரின் வாக்குறுதிகள்

Published On 2020-07-11 08:42 GMT   |   Update On 2020-07-11 08:42 GMT
திரு இதய ஆண்டவர் புனித மார்கரீத்து மரியா வழியாக தம் பக்தர்களுக்கு 12 சிறப்பான வாக்குறுதிகளை அருளியுள்ளார். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
திரு இதய ஆண்டவர் புனித மார்கரீத்து மரியா வழியாக தம் பக்தர்களுக்கு 12 சிறப்பான வாக்குறுதிகளை அருளியுள்ளார். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.
2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.
3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம்.
4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.
5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.
6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும்.
7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.
8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.
9. எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.
10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.
11. திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.
12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, திருவருட் சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.
Tags:    

Similar News