ஆன்மிகம்
இன்று நம்முடைய தியானத்திற்கு கடவுள் ஏன் மனிதன் ஆனார்? என்ற தலைப்பை கருத்தாய் ஆராய்ந்து பார்ப்போம். இன்று ஆத்மீக தேடலில் இருக்கும் அனைவரும் கடவுளை தேடி பிரயாணப்படுகிறார்கள்.
இன்று நம்முடைய தியானத்திற்கு கடவுள் ஏன் மனிதன் ஆனார்? என்ற தலைப்பை கருத்தாய் ஆராய்ந்து பார்ப்போம். இன்று ஆத்மீக தேடலில் இருக்கும் அனைவரும் கடவுளை தேடி பிரயாணப்படுகிறார்கள். பலர் பல வழிமுறைகளை கையாளுகிறார்கள். ஆனால், இறை மகன் இயேசு கிறிஸ்து மனிதனாக இப்பூமியில் பிறந்து மனிதனுடைய பாவங்களை ஏற்று அதற்கான தண்டனையை அனுபவித்து மனுகுலத்தை மீட்கிறார். இப்பொழுது தான் அந்த கேள்வி நமக்குள் பிறக்கிறது. கடவுள் ஏன் மனிதனாய் பிறந்தார்? இதை வேதம், தெளிவாக விளக்குகிறது.
எபிரேயர் 2:14,15 வசனங்களை நாம் பார்க்கும் போது, பிள்ளைகள் மாமிசத்தையும், ரத்தத்தையும் உடையவர்களாக இருக்க அவரும்(இயேசு) அவர்களை போல மாமிசத்தையும் ரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார். இவ்வேத வாக்குகளின் அடிப்படையில் இறைவன் இயேசு மனிதர்களை தம் பிள்ளையாக பார்க்கிறது மட்டுமல்லாமல் அவர்களை போலவே இந்த பூமியில் பிறந்து, தான் தேவனாய் இருந்தும் மனுச ரூபமும், மனுச சாயலுமாகிறார்.
பிலிப்பியர் 2:7,8 ஆகிய வசனங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. இரண்டாவதாக மரணத்திற்கு அதிபதியாய் அதிகாரியாய் இருக்கின்ற பிசாசானவளை அழிக்கும்படி மனிதனாய் பிறக்கிறார். மனிதனை பாவம் செய்ய வைத்து தன் பக்கம் இழுத்து செல்லும் சாத்தானை ஜெயிக்கவே இந்த பூமியில் இயேசு மனிதனாக பிறந்து நம் பாவங்களுக்காக சிலுவைப்பாடுகளை அனுபவித்து தன் உயிரையே கொடுத்து உள்ளார். எனவே இந்த தவக்காலத்தில் அவரது சிலுவைப்பாடுகளை நினைவு கூர்வோம்.
பாஸ்டர் ஆனந்த்,
இயேசு ரட்சிக்கிறார் சபை, திருப்பூர்.
எபிரேயர் 2:14,15 வசனங்களை நாம் பார்க்கும் போது, பிள்ளைகள் மாமிசத்தையும், ரத்தத்தையும் உடையவர்களாக இருக்க அவரும்(இயேசு) அவர்களை போல மாமிசத்தையும் ரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார். இவ்வேத வாக்குகளின் அடிப்படையில் இறைவன் இயேசு மனிதர்களை தம் பிள்ளையாக பார்க்கிறது மட்டுமல்லாமல் அவர்களை போலவே இந்த பூமியில் பிறந்து, தான் தேவனாய் இருந்தும் மனுச ரூபமும், மனுச சாயலுமாகிறார்.
பிலிப்பியர் 2:7,8 ஆகிய வசனங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. இரண்டாவதாக மரணத்திற்கு அதிபதியாய் அதிகாரியாய் இருக்கின்ற பிசாசானவளை அழிக்கும்படி மனிதனாய் பிறக்கிறார். மனிதனை பாவம் செய்ய வைத்து தன் பக்கம் இழுத்து செல்லும் சாத்தானை ஜெயிக்கவே இந்த பூமியில் இயேசு மனிதனாக பிறந்து நம் பாவங்களுக்காக சிலுவைப்பாடுகளை அனுபவித்து தன் உயிரையே கொடுத்து உள்ளார். எனவே இந்த தவக்காலத்தில் அவரது சிலுவைப்பாடுகளை நினைவு கூர்வோம்.
பாஸ்டர் ஆனந்த்,
இயேசு ரட்சிக்கிறார் சபை, திருப்பூர்.