ஆன்மிகம்
தூய வியாகுல அன்னை ஆலய தேர் பவனி

தூய வியாகுல அன்னை ஆலய தேர் பவனி

Published On 2020-03-09 05:13 GMT   |   Update On 2020-03-09 05:13 GMT
ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் திருப்பலியும், இரவு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் 9-ம் திருவிழாவையொட்டி கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் தேவசகாயம் மவுண்ட் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலையிலும் தேர் பவனி நடந்தது. பின்னர் நற்கருணை பவனியும், தொடர்ந்து இரவு புனிதர் தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டீபன், இணை பங்குதந்தை மரிய ஜோசப்சிபு, பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News