ஆன்மிகம்
இயேசு

ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்

Published On 2020-02-22 04:03 GMT   |   Update On 2020-02-22 04:03 GMT
ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்(எபேசியர் 4:31-31).
ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்(எபேசியர் 4:31-31). ரிச்சட் ஸ்வென்சன் தன்னுடைய புத்தகமாக மார்ஜினில் நாம் வாழ்ந்து கெண்டு இருக்கும் சமுதாயம் தொல்லைகள் நிறைந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் நாம் பதில்களை விட கேள்விகளை அதிகமாகவும், தீர்வுகளை விட பிரச்சனைகளை அதிகமாவும் பெற்றிருக்கிறோம். சிலருக்கு மட்டுமே எண்ணத்தை கேட்டு செயல்பட வேண்டும் என்று தெரியும் என்கிறார்.

மனஅழுத்தம் என்பது எதிர்மறையான ஒரு மனோநிலை அல்ல. சரியான முறையில் அதனை கையாளும் போது அது நம்மை முன்னேற்றத்திற்கான பாதையில் இட்டு செல்லும். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதனால் உமது பிரமாணங்களை கற்றுக்கொள்ளுகிறேன்(சங்கீதம் 119:71).

வெளிப்புற சூழ்நிலைகளால் மனஅழுத்தம் ஏற்படுவதில்லை. வெளிப்புற சூழ்நிலைகளுக்கு ஆழ்மனதிலிருந்து நாம் கொடுக்கும் பதிலே மனபுழுக்கத்திற்கு காரணம்.

இதற்கு எல்லாம் மூலகாரணம் கடவுள் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை குறைவு தான். கடவுளை முதலாவதாக நம் வாழக்கையில் கொண்டு வரும் போது அவர் எல்லாவற்றையும் பொறுப்பெடுத்து கொள் சித்தமாயிருக்கிறார். உன் சுயபுத்தியின் மேல் சாயாமல் உன் முழுஇருதயத்தோடும், கர்த்தரின் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளில் எல்லாம் அவரை நினைத்து கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார். (நீதி மொழிகள் 35-6).

எல்லாம் வல்ல தேவனிடம் நாம் நம் குறைகளையும், பாரங்களையும் அனுதினமும் அவர் பாதத்தில் ஊற்றிவிடும் போது அவர் நம் வாழ்க்கையை பொறுப்பெடுத்து கொள்கிறார். கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார். பல நேரங்களில் கீழ்படியாமையும், பாவங்களும் உண்மையான சமாதானம் மற்றும் மகிழ்ச்சியில் இருந்து நம்மை துண்டித்து விடும். கடவுளின் வார்த்தையை நம் மனங்களில் நிறைப்பதன் மூலமும அனைத்தையும் ஜெபத்தில் ஏறெடுப்பதன் மூலமும மட்டுமே மனஅழுத்தத்திற்கு உண்மையான தீர்வை கொண்டு வர இயலும். இதனுடைய பயனாக தேவனுடைய கிருபையும், சமாதானமும், அன்பும் நம் உள்ளத்தை ஆளுமை செய்து மனஅழுத்தத்தை வெளியேற்றும்.
Tags:    

Similar News