ஆன்மிகம்
கொடைக்கானல் அந்தோணியார் ஆலய சப்பர பவனி
கொடைக்கானல் அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சப்பர பவனி நடைபெற்றது.
கொடைக்கானல் அந்தோணியார் கோவில் தெருவில் புனித பதுவை அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 99-வது ஆண்டு திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி பூஜைகள், உறுதிபூசுதல் ஆகியவை நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 15-ந்தேதி சப்பர பவனி நடைபெற்றது. அதற்கு முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் முன்னாள் பங்குதந்தை ஆனந்தம் முன்னிலை வகித்து, திருப்பலியை நடத்தி வைத்தார்.
வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் தலைமை தாங்கினார். இதில் உதவி பங்குத்தந்தை சாம் ரிச்சர்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்றைய தினம் இரவு புனித பதுவை அந்தோணியாரின் மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் சப்பர பவனி நடந்தது. இதில் புனித பதுவை அந்தோணியார் சப்பரத்தை பெண்கள் இழுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், புனித அந்தோணியார் ஆலய சங்கத்தினர், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் தலைமை தாங்கினார். இதில் உதவி பங்குத்தந்தை சாம் ரிச்சர்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்றைய தினம் இரவு புனித பதுவை அந்தோணியாரின் மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் சப்பர பவனி நடந்தது. இதில் புனித பதுவை அந்தோணியார் சப்பரத்தை பெண்கள் இழுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், புனித அந்தோணியார் ஆலய சங்கத்தினர், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.