ஆன்மிகம்
மெயின்கார்டுகேட் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி
திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய 124-ம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய 124-ம் ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் திருவிழா திருப்பலி நிகழ்ச்சி இனிகோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை மரிவளன், உதவி பங்குத்தந்தை லியோலின், அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் வழியாக நந்திகோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, சத்திரம் பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கப்பட்டது.
தேர்பவனியையொட்டி கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி கமிஷனர்கள் விக்னேஷ்வரன், அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் திருவிழா திருப்பலி நிகழ்ச்சி இனிகோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை மரிவளன், உதவி பங்குத்தந்தை லியோலின், அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் வழியாக நந்திகோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, சத்திரம் பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கப்பட்டது.
தேர்பவனியையொட்டி கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி கமிஷனர்கள் விக்னேஷ்வரன், அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.