ஆன்மிகம்
தூய பவுல்

பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை-அசன விழா

Published On 2020-02-01 09:29 IST   |   Update On 2020-02-01 09:29:00 IST
மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன விழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங் களில் ஒன்றான மெஞ்ஞான புரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன விழா கடந்த 21-ந்தேதி தொடங் கியது. விழா நாட் களில் தினமும் இரவில் பட்டி மன்றம், பார்வையற்றோர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டம் போன்றவை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பேரா யர் தேவசகாயம் தலைமையில், 173-வது பிரதிஷ்டை பண் டிகை ஆராதனை, பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடை பெற்றது. இதில் திரளான வர்கள் கலந்து கொண்டனர்.

காலையில் போதகர் ஜான் தாமஸ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அசனத்துக்கு உலை ஏற்றப்பட்டது. மதியம் 3 மணி அளவில் அசன விருந்து தொடங் கியது. தொடர்ந்து நள்ளிரவு வரையிலும் பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு அசன விருந்து வழங்கப் பட்டது. இரவில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது.

Similar News