ஆன்மிகம்
காட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-ம் ஆண்டு திருவிழா நேற்று மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தையர் லியோன் மாஸ்கரேன்ஹஸ், வா்ணன் அக்யார், ஏசுராஜ் ஆகியோர் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.
தொடர்ந்து திருவிழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் 20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா, தமிழ் திருப்பலி நடக்கிறது. 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தியானம் நடக்கிறது. 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடக்கிறது.
தொடர்ந்து திருவிழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் 20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா, தமிழ் திருப்பலி நடக்கிறது. 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தியானம் நடக்கிறது. 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடக்கிறது.