ஆன்மிகம்
குழந்தை இயேசு

அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா

Published On 2020-01-16 03:50 GMT   |   Update On 2020-01-16 03:50 GMT
பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா 5 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கல் ராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார்.

நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பேட்ரிக் தலைமையில் கிளாட்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். 17-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் சுவக்கின் தலைமை தாங்குகிறார். கிளேட்டன் மறையுரையாற்றுகிறார்.

18-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் குணபால் ஆராச்சி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 19-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டேன்லி சகாயம் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணிப் பேரவையினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News