ஆன்மிகம்
பூண்டி மாதா

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

Published On 2020-01-10 03:44 GMT   |   Update On 2020-01-10 03:44 GMT
பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் பூண்டிமாதா, பூலோகம் போற்றும் மாதா என பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட பூண்டி மாதா பேராலயத்தில் 2020-ம் ஆண்டின் முதல் புதுமை இரவு வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பக்தர்களின் நலன்களுக்காகவும் உலக அமைதிக்காகவும் நடைபெற்ற இந்த புதுமை இரவு வழிபாட்டினை தர்மபுரி மாவட்டம் ஓசூர் பங்குத்தந்தை வினோத்லூயிஸ் வழிநடத்தினார்.

அருள்பொழிவு திருப்பலியுடன் புதுமை இரவு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து பூண்டி அன்னையின் தேர்பவனி நடந்தது.

அப்போது பக்தர்கள் ஜெபமாலை பாடல்களை பாடினர்.

இதையடுத்து நற்கருணை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு முழுவதும் பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்த வழிபாட்டில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் விக்டர்லாரன்ஸ், ஆரோக்கியராஜேஷ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
Tags:    

Similar News