ஆன்மிகம்
ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதையொட்டி கடலூரில் தூய எபிபெனி தேவாலயத்தில் அருட்தந்தை அருண் ஜெபஸ் தலைமையில் நேற்று இரவு 11.30 மணிக்கு பழைய வருட ஆராதனை நடந்தது.
பின்னர் 12 மணிக்கு ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டு, புதிய வருட ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, சொரக்கால்பட்டு அந்தோணியார் ஆலயம், திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் நள்ளிரவு 12 மணி ஆனதும் 2020-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பல இடங்களில் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
பின்னர் 12 மணிக்கு ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டு, புதிய வருட ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, சொரக்கால்பட்டு அந்தோணியார் ஆலயம், திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் நள்ளிரவு 12 மணி ஆனதும் 2020-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பல இடங்களில் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.