ஆன்மிகம்

தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்

Published On 2018-12-08 03:04 GMT   |   Update On 2018-12-08 03:04 GMT
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடி பவனி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை ஆகியவை நடந்தது. அதைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து திருப்பலி மற்றும் மறையுரையாற்றினார். இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News