ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

Published On 2018-08-10 03:07 GMT   |   Update On 2018-08-10 03:07 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் இந்த மாதத்துக்கான (ஆகஸ்டு) புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதந்தோறும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் இந்த வழிபாடு நடக்கிறது. இந்த மாதத்துக்கான (ஆகஸ்டு) புதுமை இரவு வழிபாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

புளியங்குடி உலக மீட்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். 
Tags:    

Similar News