ஆன்மிகம்

தாழ்மை உயர்வுக்கு வழி

Published On 2018-07-05 06:21 GMT   |   Update On 2018-07-05 06:21 GMT
என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம்.
இறைவனிடம் 2 பேர் வணங்குகின்றனர். அதில் ஒருவர் நான் மிகவும் நல்லவன். நேர்மையானவன். ஆதலால் எனக்கு அருள்புரிய வேண்டும் என்றார்.

இரண்டாவதாக வேண்டியவன், நான் பலவீனமான மனிதன். என் மீது இரக்கம் காட்டும் என்கிறான். இவனுக்கே கடவுள் இரங்குகிறார் (லூக்கா 18:9-14). இறைவேண்டலின் ஒப்பீடு ஒரு போதும் ஏற்புடையதல்ல. பலவீனத்தை கடந்து ஒருவன் தனது சுய விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தான் மட்டுமே யோக்கியன் மற்றவர் எல்லாம் அயோக்கியன் என்ற ஏளனப் பார்வை, கடவுளின் பார்வையில் அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு ரோஜாவுக்கும் சுய விருப்பம் உண்டு. அதேபோல ஒவ்வொரு மனிதனுக்கும் சுய விருப்பம் உண்டு. தன்னை அன்பு செய்பவரால் மட்டும் தான், அடுத்தவரை அன்பு செய்ய முடியும்.

சமூகத்தை அன்பு செய்ய முடியும். எனவே தான், இரண்டாவதாக கடவுளை வணங்கியவன் அடுத்தவரோடு தன்னை ஒப்பிடவில்லை, ஏளனப்பார்வையை செலுத்தவில்லை. ஆகவே! கடவுள் இவருக்கு அருள்புரிகிறார். தாழ்மையே உயர்வுக்கு வழி வகுத்தது.

உடல் அழகின், திறமையின், குடும்ப பின்னணி அடிப்படையில் என்னை பிறரோடு ஒப்பிட்டு உயர்வாக அல்லது தாழ்வாக எண்ணிக்கொள்வது. என்னோடு கூட வாழ்பவர்களை மற்ற நபர்களோடு ஒப்பிடுவது. உதாரணமாக, மனைவி கணவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரனை பார். எப்படி சம்பாதிக்கிறான். நீங்களும் தான்.. என்று பேசுவது.

என்னை, என்னோடு ஒப்பிடுவது. நேற்றைய தினத்தை காட்டிலும், இன்று தீயதை நீக்கி நல்லதை பற்றி கொண்டு வாழ முயலும் சுய ஆய்வு. சிந்திப்போம். தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.

- வில்லியம், பங்குத்தந்தை, புனித லூர்து அன்னை ஆலயம், வடகரை. 
Tags:    

Similar News