ஆன்மிகம்
காட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
மும்பை காட்கோபர் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-வது ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-வது ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தையர் லியோன் மாஸ்கரேன்ஹஸ், வா்ணன் அக்யார், ஏசுநராஜ் ஆகியோர் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினர்.
20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழாவும், தமிழ் திருப்பலியும் நடந்தது. 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தியானம் நடந்தது. 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழாவும், தமிழ் திருப்பலியும் நடந்தது. 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தியானம் நடந்தது. 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.